Tuesday, October 11, 2011

யாழ் ரிப்போர்ட் ;)

இன்றுடன் எனது யாழ் ' trip ' முடிவடைகிறது. பெற்றோருடன் வந்து அவர்களுடனும் அக்கா, மாமா, மாமி மற்றும் அவர்களது செல்லங்களான பூனை, நாயுடன் நேரம் கழித்துவிட்டு மீண்டும் திரும்புவது திருப்தியாக இருக்கிறது. 


ஊரில் இந்த நாட்களில் முக்கியமான '  topic' , மர்ம மனிதன் -ஒவ்வருவரும் ஒவ்வரு விதத்தில் அவனை வருணிப்பார்கள் அனால் இதன் பின்புலம் பற்றி வர்ணிக்கும் போது மட்டும் நிச்சயமாக ........... தான் செய்றாங்கல் எண்டு அடித்து சொல்லுகிறார்கள். இங்கு உள்ள ஒரு  பெரிய ஒற்றுமை இந்த விஷயத்தில் மட்டும் தான், லைட் இடகட போவதுவும், மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதும் எல்லாம் அவங்கள் பிளான் பண்ணி செய்கிறார்களாம். இதை கேட்ட போது விமல் எழுதிய ப்ளாக் தான் ஞாபகம் வந்தது. 

இங்கு வந்து இருந்து "Tuesdays with Morrie" என்ற புத்தகம் வாசித்ததில் சிலகாலம் செய்ய வேண்டும் என்று நினைத்து செய்யாமல் தட்டி போட்ட ஒரு விஷயத்தை செய்யும் முயற்சியில் ஒரு இரு படிகள் வைக்க கிடைத்ததும் ஒரு சந்தோசம். இது பற்றி நேரம் கனிந்து வரும் போது இங்கு எழுதுவேன். 

அனால் ஒரு கவலை, நான் camera cable ஐ கொண்டு வர மறந்து விட்டேன் எடுத்த படங்களை பார்க்காமல் இருப்பது மனதுக்கு கஷ்டம்.  நாளை அவற்றை பஹிர முயல்வனே . 

No comments:

Post a Comment